Friday, June 30, 2006

உயர் கல்வியில் இட ஒதுக்கீடு

மூலம்: இடஒதுக்கீடு என்றதுமே ஏண்டா குதிக்கிற?

அது ஏன்னாடா ஏற்கனவே இருக்கற இடஒதுக்கீடே உண்மையா உதவி தேவைப்படறவங்களுக்கு போகாதது நாலதான்டா..


கருணாநிதியோட பேரப்புள்ளைங்களுக்கும் அதே சாதில எங்கயோ பேர் தெரியாத கிராமத்துல இருக்கறவனுக்கும் ஒரே மாதிரி இட ஒதுக்கீடு. இதுல போட்டி போட்டு அந்த இடஒதுக்கீட அனுபவிக்கிறதும் முன்னேறிய கொழுத்த ஓ.பி.சி காரங்கதான் அதிகம். அதனாலதான்டா பொருளாதார வசதியையும் பெற்றோர்களோட கல்வித்தகுதியையும் கணக்குல எடுத்துகிட்டு உண்மையாக பின்தங்கி இருக்கறவங்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு செய்யனும்னு சொல்றாங்க. அன்புமணியின் குழந்தைகளும் தயாநிதியின் குழந்தைகளும் பிற்படுத்தப் பட்டவங்களா? அவங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கறதுனால பாதிக்கப் படறது நான் மட்டும் இல்ல, நீயும்தான். அத சரி செஞ்சா இருக்கற இட ஒதுக்கீடே போதும்.


அப்புறம் மீதி 50% என்னமோ அப்பர் கேஸ்டுக்கு குடுத்துருக்குற மாதிரி சில கேனப்பயலுக பேசறாங்க. நல்லா கண்ணத்தொறந்து பார்த்தா அந்த 50%-ல 90%(அதாவது மொத்ததுல 45%) சீட்டை அள்ளுறது ஓ.பி.சி. தான். அப்புறம் இட ஒதுக்கிட்டுல 27% ஆக 51% மக்கள்தொகை இருக்கற ஓ.பி.சி. மொத்தம் 72% சீட்டை புடிச்சிக்கறாங்க. அதுபோக பிரைவேட் காலேஜ்ல பணம் குடுத்து சேருறது. அதுக்க்கெல்லம் ஓ.சி. கிட்டயோ எஸ்.சி. கிட்டயோ பணம் கெடையாது. 15% சதவீதம் இருக்கும் ஓ.சிக்கு கிடைப்பது 5%மும் அதற்குக் கீழும்தான். அதற்கும் எந்த உத்திரவாதமும் கிடையாது. எஸ்.சி க்கு ஒதுக்கியிருக்கற சீட்டுகளே ஃபில் ஆகறது இல்லயாம். ஏன்னா, நெறைய பேரு ஸ்கூலையே தான்டறது இல்ல. சோ, பாதிக்கப் படறது ஓ.சி. தான். அப்புறம் கதறாம என்ன பன்றது? ஏற்கனவே இந்த 50% இட ஒதுக்கீடு யூ.ஜி.-ல இருக்கு. இப்போ பேச்சு பி.ஜி. பத்திதான். டாக்டருக்கு படிச்சப்புறமும் ரெண்டு டாட்கடரும் ஒன்னு கெடையாது அப்படின்னா, அவுங்க ப்ராக்டிஸ் பன்னும்போது இத்தனை சதவிகித நோயாளிகள் இந்த டாக்டர் கிட்டதான் போகனும்னு அடுத்து சட்டம்போடுவீங்களா? என்ன கன்ட்றாவிடா இது!

luckylook said...
கேவலமான மொழியில் பின்னூட்டம் இட்ட சாணக்கியன் என்பவரின் பின்னூட்டம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது... இதுபோன்ற ஜாதிவெறியர்களுக்கு எதிரான போலி டோண்டுவின் நிலைப்பாடு சரிதானோ என எண்ண வைக்கிறது.....

சாணக்கியன் said...
வலையுலக நண்பர்களே அவர் தலைப்பில் பயன்படுத்திய 'டா' வைத்தான் நானும் பயன்படுத்தி இருக்கிறேன். அதைத்தவிர வேறு எந்த வார்த்தையையும் பயன்படுத்தவில்லை. அவர் என்னுடைய பின்னூட்டத்தை வெளியிடாவிட்டால் அது ஒரு தனி பதிவாக வெளியிடப்படும்.

அதைப் படித்து அதில் தவறான வார்த்தைகள் இருக்கிறதா, ஜாதி வெறி இருக்கிறதா என்று நீங்களே புரிந்து கொள்ளலாம்.

0 Comments:

Post a Comment

<< Home